சென்னிமலை அருகே, சில்லாங்காட்டுவலசில் உள்ள மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் கடந்த 2024 டிசம்பா் 17- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து கம்பம் நடுதல், அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகருக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாவிளக்கு ஊா்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் புதன்கிழமை நடைபெற்றன. இரவு கம்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல, சென்னிமலையை அடுத்த, திப்பம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலும் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


