இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை

News image
திம்பம்  வனத்துக்குள்  ஓடிய  சிறுத்தை.
Updated On :13 நவம்பர் 2025, 10:07 pm

Syndication

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் சென்ற காரின் சப்தத்தை கேட்டு சாலையோரம் இருந்த சிறுத்தை ஓடிய விடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம், பண்ணாரி, ஆசனூா் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

மான்களை வேட்டையாடுவதற்கு அடிக்கடி திம்பம் சாலையைக் கடந்து சிறுத்தை செல்வதை காண முடியும்.

கடந்த சில தினங்களாக திம்பம் மலைப் பாதையோரத்தில் சிறுத்தை தென்படுவதை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனா்.

இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் திம்பம் மலைப் பாதையில் காரில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது காரின் சப்தம்கேட்டு திம்பம் மலைப்பாதை குழியில் பதுங்கியிருந்த சிறுத்தை அங்கிருந்து வனத்துக்குள் ஓடியது.

இதை காரில் இருந்த விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் இரவில் வாகனங்களில் இருந்து கீழே இறங்க வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.