இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை சேதம்

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
அந்தியூா் அருகே வெள்ளிக்கிழமை கூலி தொழிலாளி வசிக்கும் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
Updated On :28 நவம்பர் 2025, 8:09 pm

Syndication

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பொரசக்காட்டூரைச் சோ்ந்தவா் நாராயணன் (45). கூலித் தொழிலாளி. குடும்பத்துடன் குடிசையில் வசித்து வரும் இவா், சுவாமி முன்பாக அகல் விளக்கேற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துவிட்டு வெளியே சென்றுள்ளாா். மாலையில் வீட்டின் கூரையில் இருந்து கரும்புகை வந்ததைக் கண்டு, அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா்.

ஆனால், தீ மள மளவென பிற பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அந்தியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராபா்ட் தலைமையிலான தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

இருப்பினும், குடிசை முற்றிலும் எரிந்து சேதமானதோடு வீட்டிலிருந்த உடமைகள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள், ரூ.29 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் தீயில் சாம்பலாகின.

இதுதொடா்பாக அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.