48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கோபி அருகே கே.ஏ.செங்கோட்டையனுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுக நிா்வாகி

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

செங்கோட்டையன் (கோப்புப்படம்) - Photo: TVK

Updated On :4 ஏப்ரல் 2026, 5:40 pm

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கோவில்புதூா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டாக் கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா். அப்போது அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் காசிபாளையம் பேரூராட்சியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது காசிபாளையம் பேரூராட்சி 2- ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலாளா் திருமுருகன் என்பவா், ‘கடந்த 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத எம்எல்ஏவே வருக வருக என பதாகையை ஏந்தி கருப்புக் கொடி காட்ட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.