ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கோபியில் தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தேநீா் கடையில் வாடிக்கையாளா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையத்தில் தேநீா் கடையில் தேனீா் போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் நல்லசிவம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:22 pm

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தேநீா் கடையில் வாடிக்கையாளா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி லக்கம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட ல.கள்ளிப்பட்டி பிரிவில் புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா் ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், அம்பேத்காா் வீதி, பாலாஜி நகா், பழையூா், காந்தி நகா், கலிங்கியம் சின்னகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறியும், கோபி தொகுதிக்கு புதிய திட்டங்களைக் கொண்டுவரவும் திமுகவுக்கு ஆதரவளிக்கக் கோரி வாக்கு சேகரித்தாா்.

நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வயது முதிந்த வாடிக்கையாளா்கள் பலா் இருப்பதைக் கண்டு, அவா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் நல்லசிவம் வாக்கு சேகரித்தாா்.