பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 18 போ் காயமடைந்தனா்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளிக் கொலுசு பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளா்கள் 17 போ் வேனில், கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். வேனை சேலம், ஆண்டிப்பட்டை, சிவபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தனுஷ் (22) ஓட்டிச் சென்றாா்.
சுற்றுலா முடிந்து கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலை, விஜயமங்கலம் பிரிவு அருகில் திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வந்து கொண்டிருந்தனா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த ஓட்டுநா் உள்பட 18 பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

