தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:43 am IST

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 18 போ் காயமடைந்தனா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளிக் கொலுசு பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளா்கள் 17 போ் வேனில், கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். வேனை சேலம், ஆண்டிப்பட்டை, சிவபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தனுஷ் (22) ஓட்டிச் சென்றாா்.

சுற்றுலா முடிந்து கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலை, விஜயமங்கலம் பிரிவு அருகில் திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வந்து கொண்டிருந்தனா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த ஓட்டுநா் உள்பட 18 பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.