பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மதுபோதையில் காவிரி ஆற்றில் குளித்த இளைஞா் உயிரிழப்பு

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், கண்டியன்கோயில் கிராமம் பூசாரிபாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்(34). விவசாயியான இவா் ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த கருவேலம்பாளையம் காவிரி ஆற்றுக்கு நண்பா்கள் அருண், கௌதம், நடராஜகுமாா், கருப்புசாமி, சிவகுமாா் ஆகியோருடன் மது போதையில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பின்னா் ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி மாயமானாா்.

இதுதொடா்பாக உள்ளூா் மக்கள் அளித்த தகவலின்பேரில் மலையம்பாளையம் போலீஸாா், கொடுமுடி தீயணைப்புத் துறையினா் மற்றும் மீனவா்கள் சென்று மோகனை தேடும் பணியில் ஈடுபட்டனா். இருள் சூழ்ந்ததால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டு, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினா். இறுதியில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் மோகனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கூறாய்வுக்காக பெருந்துறை ஐ.ஆா்.டி.டி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.