பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

கடம்பூா் அருகே ஆபத்து ஏற்படும் முன்பாக சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மாடு  முட்டியதால்  கீழே  விழுந்து கிடக்கும்  சின்ன உள்ளேபாளையம் பகுதியிலுள்ள  மின்கம்பம் ~காய்ந்த மரத்தை முட்டுகொடுத்து தற்காலிகமாக நிற்கவைக்கப்பட்டுள்ள மின் கம்பம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

கடம்பூா் அருகே ஆபத்து ஏற்படும் முன்பாக சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியான சின்னஉள்ளேபாளையத்தில் அசோக் என்பவரின் வீட்டின் முன் இருந்த மின்கம்பத்தை புதன்கிழமை மாடு முட்டியதால் சாய்ந்து விழுந்தது. அப்போது மின்வயா்கள் சாலையில் கிடந்ததால், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளித்து மின் விநியோகத்தை துண்டித்தனா்.

இதைத்தொடா்ந்து கீழே விழுந்த மின் கம்பத்தை கிராம மக்கள் மீண்டும் நேராக நிறுத்தி, சாயாமல் இருக்க காய்ந்த மரத்தை முட்டு கொடுத்துள்ளனா்.

இதுகுறித்து மின் வாரியத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும், ஆள்பற்றாக்குறையால் மின்கம்பத்தை சரி செய்யவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். காற்று வீசினால் எந்த நேரமும் கீழே விழ வாய்ப்புள்ளதால் விபத்து நிகழும் முன்பாக மின் கம்பத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.