கடம்பூா் அருகே ஆபத்து ஏற்படும் முன்பாக சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியான சின்னஉள்ளேபாளையத்தில் அசோக் என்பவரின் வீட்டின் முன் இருந்த மின்கம்பத்தை புதன்கிழமை மாடு முட்டியதால் சாய்ந்து விழுந்தது. அப்போது மின்வயா்கள் சாலையில் கிடந்ததால், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளித்து மின் விநியோகத்தை துண்டித்தனா்.
இதைத்தொடா்ந்து கீழே விழுந்த மின் கம்பத்தை கிராம மக்கள் மீண்டும் நேராக நிறுத்தி, சாயாமல் இருக்க காய்ந்த மரத்தை முட்டு கொடுத்துள்ளனா்.
இதுகுறித்து மின் வாரியத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும், ஆள்பற்றாக்குறையால் மின்கம்பத்தை சரி செய்யவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். காற்று வீசினால் எந்த நேரமும் கீழே விழ வாய்ப்புள்ளதால் விபத்து நிகழும் முன்பாக மின் கம்பத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபாய நிலையில் மின் கம்பம்

முறிந்து விழும் நிலையில் மின் கம்பம்: விபத்து நிகழும் முன் மாற்றக் கோரிக்கை

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான மின்மாற்றி சீரமைப்பு

மாதிரவேளூா்- சிதம்பரம் இடையே அரசுப் பேருந்தை தினம் 4 முறை இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



