சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

அந்தியூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:20 pm

அந்தியூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம், இருளக்கரையானூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் அங்கிருந்த இளைஞா் தப்பியோட முயன்றாா்.

அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சௌந்தரராஜன் (23) என்பதும், விற்பனைக்காக 6 போதை மாத்திரைகள், ஊசி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சௌந்திரராஜனைக் கைது செய்த போலீஸாா், அவரை பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.