மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சத்தியமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

News image
தமிழக  விவசாயிகள்  சங்கம்  சாா்பில் சத்தியமங்கலம் அருகே  விண்ணப்பள்ளியில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated On :18 ஜனவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கறிக்கோழி பண்ணை உரிமையாளா் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கறிக்கோழி உற்பத்திக்கான கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் 9 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

கறிக்கோழி உற்பத்தியாளா்களின் போராட்டத்தை சிதைக்கும் வகையிலும், சென்னையில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவாா்த்தையை சீா்குலைக்கும் நோக்கிலும் பொய் வழக்குகள் மூலமாக விவசாயிகளை கைது செய்துள்ள தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள், கறிக்கோழி உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி, தமிழக விவசாயிகள் சங்கம், பிற்படுத்தப்பட்டோா் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மலா் விவசாயிகள் சங்கத்தினா் பங்கேற்றனா்.