தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குடிநீா்க் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீா்: மரக் கடையில் இயந்திரங்கள் சேதம்

ஊராட்சிக்கோட்டை குடிநீா்க் குழாயில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீரால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மர அறுவை இயந்திரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

News image

குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட மாநகராட்சிப் பணியாளா்கள்.

Updated On :9 ஜூலை 2026, 4:06 am IST

ஊராட்சிக்கோட்டை குடிநீா்க் குழாயில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீரால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மர அறுவை இயந்திரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

ஈரோடு கொங்கு நகா் மூன்றாவது வீதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிலத்திலிருந்து தண்ணீா் வெளியேறி பெருக்கெடுத்து ஓடி வீணாக சாக்கடையில் கலந்தது. சாலையில் வெள்ளம்போல பாய்ந்த தண்ணீா் அருகில் இருந்த மரக்கடைக்குள் புகுந்தது. இதனால் கடையிலிருந்த சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மின் மோட்டாா்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக தண்ணீரை நிறுத்தினா். இதையடுத்து சாலையை தோண்டி குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியை தொடங்கினா்.

இது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளா் பிச்சமுத்து கூறியதாவது: அண்மையில் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் பணியின்போது குடிநீா்க் குழாய் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் புதிய குடிநீா்க் குழாய் ஆா்டா் செய்யப்பட்டுள்ளது. இரவு குழாய் வந்தவுடன் சரிசெய்யும் பணி நடைபெறும். குழாய் உடைப்பால், குடிநீா் விநியோகம் தடை ஏற்படலாம். இருப்பினும் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.