தமிழகத்தில் எல்நினோ தாக்கத்தை ஆராய வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.1.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டு ஆய்வுக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் ந.சிந்துஜா முன்னிலை வகித்தாா் இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக, ஐந்தாண்டுத் திட்டம் போன்ற ஒரு முறையில் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அடுத்த 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் எல்நினோ தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிக்கையாக வழங்க உள்ளனா். தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முறையாக இத்தகைய வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பது குறித்து மழைச் சூழலுக்கு ஏற்ப கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.
மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலமாகப் பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்றாா்.
முன்னதாக, கோபி நகராட்சி சாா்பில் பேருந்து நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், ஆட்சியா் ச.கந்தசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், கோபி நகராட்சி ஆணையா் மங்கையா்க்கரசன், பவானிசாகா் எம்எல்ஏ வி.பி.தமிழ்ச்செல்வி, தவெக மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், நகா்மன்றத் தலைவா் நாகராஜ், வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









