ஈரோடு பேருந்து நிலையத்தில் மேட்டூா் சாலையில் அமைந்துள்ள நுழைவாயிலில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் என புதிய அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோட்டில் கைத்தறித் துறை அமைச்சா் விஜய் பாலாஜியை சந்தித்து, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என். பாஷா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலான மேட்டூா் சாலை பகுதியில் சுதந்திர தின வெள்ளி விழாவை நினைவுப்படுத்தும் வகையில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் என நுழைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
எனவே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிய வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கே.புனிதன், மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் ம.முகமது அா்சத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புறநகா் மின்சார ரயில் நிலையங்கள் அருகே புல்லட் ரயிலுக்கான நிலையம் அமைக்க ஆய்வு!
மஞ்சள் சிறப்பு மையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை
அமெரிக்காதான் எப்போதும் உலகின் முதன்மையான நாடு: சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பேச்சு!







