சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம்

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :11 ஜூன் 2026, 3:24 am IST

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு 134 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, இணையவழி பட்டாக்களை வழங்கினாா்.

வேளாண்மை துறை சாா்பில் இரண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்க தொகுப்பாக ரூ.6000 வீதம் வழங்கியதுடன், மாவட்ட அளவிலான நிலக்கடலை விளைச்சல் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த விவசாயி ஒருவருக்கு ரூ.10ஆயிரம் பரிசு வழங்கினாா்.

இதேபோல தாட்கோ திட்டத்தின் கீழ் கால்நடை வளா்ப்புக்கு 10 பயனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சம், தொழிலாளா் நலத் துறை சாா்பில் திருமண உதவித்தொகை உள்பட 174 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும் வழங்கினாா்.