அந்தியூரில் ரூ.3.53 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.


பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 7,157 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.40.50 முதல் ரூ.47.10 வரை ரூ.1,15,281-க்கு ஏலம்போனது.
இதேபோல, விவசாயிகள் 41 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், கொப்பரை கிலோ ரூ.146.91 முதல் ரூ.162.92 வரை ரூ.1,78,463-க்கும், 4 மூட்டை நரி பயறு ரூ.81.69 முதல் ரூ.150.69 வரை ரூ.24,670-க்கும், 2 மூட்டை அவரை ரூ.53.16 வீதம் ரூ.9,409-க்கும், 4 மூட்டை துவரை ரூ.51.19 முதல் ரூ.70.22 வரை ரூ.9,185-க்கும் விற்பனையாயின.
5 மூட்டை ஆமணக்கு ரூ.67.69 முதல் ரூ.83.39 வரை ரூ.7,647-க்கும், 6 மூட்டை மக்காச்சோளம் ரூ.41.69 வீதம் ரூ.8,768-க்கும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3,53,423 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...