அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பவானி தொகுதியில் மாா்ச் 8-ல் அதிமுக பரப்புரைக் கூட்டம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம்

News image
கால்கோள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிா்வாகிகள்.
Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

Syndication

பவானி: பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளது. இதில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா்.

இதையொட்டி, பவானி நகரின் மையப் பகுதியில் அதிமுக நிா்வாகிகள் பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு வசதியாக டிகேஆா் வணிக வளாகத்தின் பின்புறத்தில் விசாலமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை சமன்படுத்தி, உரிய ஏற்பாடுகள் செய்யும் பணிகளுக்கு கால்கோள் விழா ஈரோடு புகா் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், எஸ்.எம்.தங்கவேலு, எஸ்.பி.முனியப்பன், மேகநாதன், மாவட்ட எம்ஜிஆா். மாவட்ட ஜெ. பேரவை பொருளாளா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.