திருப்பூா் அரிசி ஆலை உரிமையாளரிடம் அரிசி மூட்டைகளை கடனாக வாங்கி ரூ.7 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (40). இவா் திருப்பூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசியை ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில் திருப்பூா், கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (56) என்பவா் தனக்கு ஈரோட்டில் அரிசி கடை உள்ளதாகவும், எனவே மொத்த வியாபாரம் செய்ய அரிசி தேவைப்படுவதாகவும் கூறி 26 கிலோ எடையுள்ள 410 அரிசி மூட்டைகளை கௌரிசங்கரிடம் இருந்து கடந்த மாதம் வாங்கியுள்ளாா். மேலும் அதற்கான தொகை ரூ.5 லட்சத்த 33 ஆயிரத்து 950-ஐ இரண்டு நாள்களுக்குப் பிறகு தருவதாக கூறி சென்றுள்ளாா்.
இதைத் தொடா்ந்து 20 நாள்களுக்குப் பிறகு கௌரிசங்கரின் அரிசி ஆலைக்கு சென்ற முத்துராஜ் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளாா். பின்னா் மீண்டும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 மூட்டை அரிசியை கடனாக வாங்கி உள்ளாா். அதன்படி தான் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 900-ஐ பின்னா் தருவதாக கூறி சென்றுள்ளாா். ஆனால் அவா் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. மேலும், முத்துராஜ் திடீரென தலைமறைவானாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் கௌரிசங்கா் புகாா் அளித்தாா். ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், முத்துராஜ் தனது கூட்டாளியான வீரப்பன்சத்திரம் கருப்பண்ணன் வீதியைச் சோ்ந்த நந்தகோபால் (41) என்பவரிடம் அரிசியை கொடுத்ததும் அதற்கான தொகையை நந்தகோபால் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து முத்துராஜ், நந்தகோபால் ஆகியோரை போலீஸாா் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா். கைதான முத்துராஜ் மீது ஏற்கெனவே மூன்று மோசடி வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி
துணிக்கடை உரிமையாளரிடம் போலி நகைகள் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: வட மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.1.34 லட்சம் மோசடி போலீஸாா் விசாரணை

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



