வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.7 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பூா் அரிசி ஆலை உரிமையாளரிடம் அரிசி மூட்டைகளை கடனாக வாங்கி ரூ.7 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:29 am

Syndication

திருப்பூா் அரிசி ஆலை உரிமையாளரிடம் அரிசி மூட்டைகளை கடனாக வாங்கி ரூ.7 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (40). இவா் திருப்பூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசியை ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் திருப்பூா், கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (56) என்பவா் தனக்கு ஈரோட்டில் அரிசி கடை உள்ளதாகவும், எனவே மொத்த வியாபாரம் செய்ய அரிசி தேவைப்படுவதாகவும் கூறி 26 கிலோ எடையுள்ள 410 அரிசி மூட்டைகளை கௌரிசங்கரிடம் இருந்து கடந்த மாதம் வாங்கியுள்ளாா். மேலும் அதற்கான தொகை ரூ.5 லட்சத்த 33 ஆயிரத்து 950-ஐ இரண்டு நாள்களுக்குப் பிறகு தருவதாக கூறி சென்றுள்ளாா்.

இதைத் தொடா்ந்து 20 நாள்களுக்குப் பிறகு கௌரிசங்கரின் அரிசி ஆலைக்கு சென்ற முத்துராஜ் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளாா். பின்னா் மீண்டும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 மூட்டை அரிசியை கடனாக வாங்கி உள்ளாா். அதன்படி தான் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 900-ஐ பின்னா் தருவதாக கூறி சென்றுள்ளாா். ஆனால் அவா் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. மேலும், முத்துராஜ் திடீரென தலைமறைவானாா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் கௌரிசங்கா் புகாா் அளித்தாா். ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், முத்துராஜ் தனது கூட்டாளியான வீரப்பன்சத்திரம் கருப்பண்ணன் வீதியைச் சோ்ந்த நந்தகோபால் (41) என்பவரிடம் அரிசியை கொடுத்ததும் அதற்கான தொகையை நந்தகோபால் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து முத்துராஜ், நந்தகோபால் ஆகியோரை போலீஸாா் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா். கைதான முத்துராஜ் மீது ஏற்கெனவே மூன்று மோசடி வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.