அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெருந்துறை அருகே மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பெருந்துறையை அடுத்த செலம்பங்காட்டு கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் தொங்குவதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.