பெருந்துறை அருகே மரத்தில் தொங்கிய ஆண் சடலம்
பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பலி
Updated On :10 மார்ச் 2026, 8:38 pm

பெருந்துறை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பெருந்துறையை அடுத்த செலம்பங்காட்டு கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் தொங்குவதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...