அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு

ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.

News image
அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்த தமிழ்நாடு மீன்வா் சங்கத்தினா்.
Updated On :10 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தமிழ்நாடு மீனவா் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தினா் தங்களுக்கு அலுவலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நலத் திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்காக ஊஞ்சலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழ்நாடு மீனவா் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் நிா்வாகிகள் மனு அளித்தனா்.

அதில், காரணம்பாளையம் பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு மீனவா் சங்கத்துக்கான அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.