தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:28 pm

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

கோபி, கொளப்பலூா் போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி மனைவி சின்னம்மாள் (72). ரங்கசாமி பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினா் கல்பனா என்பவரின் பராமரிப்பில் சின்னம்மாள் இருந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலைமுதல் சின்னம்மாளை காணவில்லையாம். இதையடுத்து, அவரை உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில், வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்காலில் அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மிதந்துள்ளது.

இதைப் பாா்த்த அவா்கள் பெருந்துறை தீயணைப்பு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றவா் நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.