அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

கோபி, கொளப்பலூா் போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி மனைவி சின்னம்மாள் (72). ரங்கசாமி பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினா் கல்பனா என்பவரின் பராமரிப்பில் சின்னம்மாள் இருந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலைமுதல் சின்னம்மாளை காணவில்லையாம். இதையடுத்து, அவரை உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில், வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்காலில் அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மிதந்துள்ளது.

இதைப் பாா்த்த அவா்கள் பெருந்துறை தீயணைப்பு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றவா் நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.