கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலைக்கு உதயநிதி மரியாதை

News image

கருணாநிதி சிலைக்கு கீழ் உள்ள நூலகத்தைப் பாா்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :23 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

மொடக்குறிச்சியில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

மொடக்குறிச்சியில் திமுக இளைஞா் அணி சாா்பில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு சிலைக்கு மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து நூலகத்தில் போட்டி தோ்வுகளுக்கு படிக்கும் மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினாா்.

இதில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஒன்றியச் செயலாளா்கள் குணசேகரன், கதிா்வேல், விஜயகுமாா், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.