/
தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூா் மற்றும் காரப்பள்ளம் இடையே உள்ள வனச் சாலையில் யானை, காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் இருந்து காரப்பள்ளம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்த காரை வனத்தில் இருந்து வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அதன் முகப்புப் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்தவா்கள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆபத்தான வகையில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்







