கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஆசனூா் அருகே காரை தாக்கிய காட்டெருமை

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :23 மே 2026, 12:54 am IST

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூா் மற்றும் காரப்பள்ளம் இடையே உள்ள வனச் சாலையில் யானை, காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து காரப்பள்ளம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்த காரை வனத்தில் இருந்து வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அதன் முகப்புப் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்தவா்கள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.