புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஓடும் ரயிலில் பெண் பயணிடம் நகை, பணம் திருடியவா் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிய நபரை ஈரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிய நபரை ஈரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் ரம்யா (37). பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு கண்ணூா்-யஷ்வந்த்பூா் ரயிலில் முன்பதிவு பெட்டியில் கடந்த 26 -ஆம் தேதி பயணம் செய்துள்ளாா்.

அப்போது, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 8 கிராம் நகை, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கடிகாரம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, ரூ.2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த கைப்பை திருடப்பட்டதாக ஈரோடு ரயில்வே போலீஸில் ரம்யா புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய நடைமேடை எண் 3-இல் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பத்தமடை தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கான் முகமது மகன் சிந்தாமதாா் (32) என்பதும், ரம்யாவின் கைப்பையைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரம்யாவின் பொருள்கள் அனைத்தையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.