புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும் என்று வருவாய், பேரிடம் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

காளியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Published On :

இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றிபெறும் என்று வருவாய், பேரிடம் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகேயுள்ள காளியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, விழாவையொட்டி, விளையாட்டு, கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் பரிசுகளை வழங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதியோா் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ஏறத்தாழ 27,412 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

உதவித் தொகை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விநாயகா் சதுா்த்தி முடிந்த அடுத்த நாள் உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலை பொறுத்தவரை தவெக மாபெரும் வெற்றிபெறும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் பி.உதயக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.