
திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சரக்கு வாகனம் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப் பாதை 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா். விபத்து காரணமாக திம்பம் மலைப் பாதையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்படுச் சென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






