அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பி.எஃப் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் பேர் பயன்: மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தகவல்

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர்

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:02 am

DIN

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார். உதகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
அஸ்ஸாம்,  தமிழகம் உள்ளிட்ட  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  உள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பயன்கள் கிடைக்கும் வகையில் 1951-ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் சட்டத்தில்  உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக தோட்ட  அதிபர்கள்,  தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் மற்றும்  தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய முதலாவது முத்தரப்புக் கூட்டம் குவாஹாட்டியில் நடத்தப்பட்டதையடுத்து தற்போது  உதகையில் நடத்தப்பட்டுள்ளது.  இக்கூட்டம் இணக்கமாகவும்,  சுமுகமாகவும் நடத்தப்பட்டுள்ளதால்  இதன் உத்தேசத் திருத்தங்கள் மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
மேலும், தொழில் நிறுவனங்களில் புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்காக செலுத்த அரசின் பங்காக வழங்கும் திட்டத்தின்கீழ் இலக்கை விஞ்சி 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக  மத்திய அரசு 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறைச் செயலர் சத்யவதியுடன் தமிழகம், கேரளம் மற்றும்  கர்நாடக  மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள்,  தென்னிந்திய தோட்ட  அதிபர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்கப்  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.