காதலர் தினத்தையொட்டி, கொய் மலர்களுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதால் அதன் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைத் தொழில் நலிவடைந்தது. இதனால் அத்தொழிலுக்கு மாற்றாக மலைத் தோட்டக் காய்கறி விவசாயம் மட்டுமல்லாமல் குடில்கள் மூலமாக இம்மாவட்டதின் காலநிலைக்கு ஏற்றவாறு வளரும் தன்மை கொண்ட கொய் மலர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
இதற்காக அரசு சார்பில் தோட்டக் கலைத் துறை உதவியுடன் வங்கிக் கடன் பெற்று பசுமைக் குடில் அமைத்து விவசாயம் மேற்கொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டினர். இதன்மூலமாக திருமண நிகழ்ச்சிகள் மட்டுமின்றிப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுவதுடன், ஏற்றுமதி செய்யப்படும் இந்த மலர் சாகுபடியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் கொய் மலர்களை சந்தைப்படுத்தி, விற்பனை செய்ய, உதகையில் உள்ள கொய் மலர் ஏல மையம் செயல்படாததால், வர்த்தகர்கள், இடைத்தரகர்கள் நேரடியாகவே விவசாயிகளிடம் கொய் மலர்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த காலங்களில் இந்த மலர்களுக்கு கடும் தேவை இருந்தது. இதனால் கார்னேசன், லில்லியம், ஜெர்பரா, ரோஜா மலருக்கும் நல்ல விலை கிடைத்து வந்தது. மேலும், மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் பெரும்பாலானோர் ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில், காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், கொய் மலர் ஒன்றுக்கு ரூ. 8 முதல் ரூ. 13 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதற்காகத் தயார் நிலையில் உள்ள கொய் மலர்களை ஏற்றுமதி செய்யவும், உள்ளூர் விற்பனைக்கு அனுப்பவும் தேவையான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என் அனுமதியின்றி எந்த சிகிச்சையும் தொடங்கக்கூடாது! சோனம் வான்சுக் மனைவி
ஜன நாயகன் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுங்கள்! அமைச்சர் ஆனந்த்

பிரியங்கா சோப்ரா பிறந்த நாள்: வாரணாசி படக் காட்சிகளுடன் வாழ்த்திய ராஜமௌலி!

மாம்பழ கேக் இல்லை இனி முதல்வர் கேக்! த்ரிஷா இந்த கேக்கை தேர்வு செய்தது எப்படி?
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



