ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: நீலகிரியில் 144 பேர் எழுதவில்லை

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 144 பேர் எழுதவில்லை. மாவட்டத்தில்  37 தேர்வு மையங்களில் 

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 144 பேர் எழுதவில்லை. மாவட்டத்தில்  37 தேர்வு மையங்களில் தேர்வு எழுதத் தகுதியான 3,743 பேரில் 3,629 பேர் மட்டும் தேர்வு எழுதியுள்ளனர்.
மாவட்டத்தில் உயிரியல் தேர்வு எழுத வேண்டிய 1,627 பேரில் 1,586 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 41 பேர் தேர்வு எழுதவில்லை.  தாவரவியல் தேர்வில் தேர்வு எழுத வேண்டிய 1,332 பேரில் 1,286 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 46 பேர் தேர்வு எழுதவில்லை.  வரலாறு தேர்வு எழுத வேண்டிய 549 பேரில் 527 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 22 பேர் எழுதவில்லை.  வணிக கணிதம் தேர்வில் தேர்வு எழுத வேண்டிய 176 பேரில் 173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3 பேர் எழுதவில்லை.  மின் இயந்திரங்களும், சாதனங்களும் தேர்வில்  35 பேரில் 33 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 2 பேர் எழுதவில்லை. பொது இயந்திரவியல் தேர்வில் மட்டும்  தேர்வு எழுத வேண்டிய 24 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
தனித் தேர்வர்களைப் பொறுத்தவரை வரலாறு பாடத் தேர்வு எழுத வேண்டிய 74 பேரில் 71 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.  3 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொறுத்த வரையில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பெற்று 22 பேர் தேர்வெழுதியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.