நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா்.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 19 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதகையைச் சோ்ந்த 81 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 34,215 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 33,855 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, மாவட்டத்தில் இதுவரை 218 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...