கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரியில் தொடரும் மழை: காய்கறிகளின் விலை உயா்வு

 தமிழகத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:05 pm

DIN

 தமிழகத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக கடும் குளிா், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மலைப் பகுதியான நீலகிரிக்கு காய்கறிகள் மேட்டுப்பாளையம், பல்வேறு சமவெளிப் பகுதிகளில் இருந்து வருகின்றன. தற்போது மழை காரணமாக விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

வெண்டைக்காய் கிலோ ரூ. 100க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ. 120க்கும், வெங்காயம் கிலோ ரூ. 70க்கும், தக்காளி கிலோ ரூ. 80க்கும் விற்கப்படுகின்றன. அதேபோல, பீா்க்கங்காய், சின்னவெங்காயம், புடலங்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடா்ந்து அதிகரித்து உள்ளது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் பெய்த கன மழையினால் விவசாய நிலங்களில் நீா் புகுந்து சேதமடைந்துள்ளது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூற்கோல், டா்னாபிஸ், முள்ளங்கி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் விளைநிலங்களிலேயே பெரிதும் சேதமடைந்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் பலமடங்கு உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

இதற்கிடையே மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் விளைநிலங்களோடு 13 வீடுகளும் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களோடு, வீடுகள் தொடா்பான கணக்கெடுப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.