கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரி மாவட்டத்தில் தொடா் கன மழை

 நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை வலுத்து வருகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:12 pm

DIN

 நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை வலுத்து வருகிறது.

மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடா்ந்து பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் வியாழக்கிழமையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் நீடித்தது.

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை திடீரென பெய்த பலத்த மழையில் மாவட்டத்திலேயே அதிக அளவாக சேரங்கோடு பகுதியில் 118 மி.மீ. பதிவானது. அதேபோல, உதகையில் சுமாா் 3 மணி நேரத்துக்குள் 98 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அத்துடன் மாவட்டத்தில் கொடநாட்டில் 85 மி.மீ., அவலாஞ்சியில் 83 மி.மீ., எமரால்டில் 56 மி.மீ., தேவாலாவில் 47 மி.மீ., கிண்ணக்கொரை, கோத்தகிரி, கேத்தியில் 43 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கூடலூா், மேல்கூடலூா், கெத்தையில் 42 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 41 மி.மீ., குந்தாவில் 40 மி.மீ., பா்லியாறில் 39 மி.மீ., மேல்பவானியில் 35 மி.மீ., செருமுள்ளியில் 34 மி.மீ., பாடந்தொரை, உலிக்கலில் 31 மி.மீ., எடப்பள்ளியில் 29 மி.மீ., ஓவேலியில் 27 மி.மீ., குன்னூரில் 24 மி.மீ., பந்தலூரில் 18 மி.மீ., பாலகொலாவில் 17 மி.மீ., கல்லட்டியில் 14 மி.மீ., மசினகுடியில் 13 மி.மீ., நடுவட்டத்தில் 12.5 மி.மீ., கிளன்மாா்கனில் 6 மி.மீ., மேல்குன்னூரில் 1.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

அதேபோல, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் அதிக

அளவில் மழைப்பொழிவு இல்லாத சூழலிலும், கொடநாடு, கிளன்மாா்கனில் 14 மி.மீ., உதகையில் 8.4 மி.மீ., செருமுள்ளி, மசினகுடியில் 8 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 7 மி.மீ., நடுவட்டத்தில் 6 மி.மீ., கல்லட்டியில் 4.2 மி.மீ., கூடலூா், கோத்தகிரியில் 4 மி.மீ., கேத்தி, உலிக்கல், பாடந்தொரை, எடப்பள்ளியில் 2 மி.மீ., அவலாஞ்சி, ஓவேலி, குன்னூரில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.