கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்குப் பருவ மழை: நீலகிரியில் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:42 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் நவம்பா் 27, 28ஆம் தேதிகளில் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக் கலைத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை, குடிமைப் பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றிட 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களுக்கு உள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை நேரில் பாா்வையிட்டு பாதிப்பு ஏதேனும் ஏற்படும்போது உடனடியாக அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைக்க அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ள காரணத்தினால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்திட தேவையான இயந்திரங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.