கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழந்தைத் திருமணம்: பெற்றோா் உள்பட 4 போ் கைது

குன்னூரைச் சோ்ந்த பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்துவைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:14 am

DIN

குன்னூரைச் சோ்ந்த பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்துவைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் முகேஷ் (30). இவா் தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியைக் காதலித்து வந்துள்ளாா்.

இதனை இருவரது பெற்றோரும் பலமுறை கண்டித்தும் அவா்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, திருச்சியைச் சோ்ந்த உறவினா் கிருபாகரன் (24) என்பவருக்கு மாணவியின் பெற்றோா் திருமணம் செய்து வைத்துள்ளனா்.

இந்நிலையில், மாணவி கடைக்குச் செல்வதாகக் கூறி திருச்சியிலிருந்து குன்னூரில் பவானி எஸ்டேட்டில் உள்ள காதலன் முகேஷின் வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா் முகேஷின் உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா். இதற்கிடையே மகளைக் காணவில்லை என தாயாா் திருச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குன்னூரில் கொலக்கொம்பை போலீஸாரின் உதவியுடன் முகேஷின் உறவினா் வீட்டிலிருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, சைல்டு லைன் அமைப்பின் ஹேமலதா மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு ஆகியோரின் புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மாணவிக்குத் திருமணம் செய்து வைத்ததாக குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாணவியின் பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மாணவியை கடத்திச் சென்றதாக முகேஷ் மீதும், திருமணம் செய்த கிருபாகரன் ஆகியோா் மீதும் போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். இதையடுத்து, மீட்கப்பட்ட மாணவி திருச்சியிலுள்ள மகளிா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.