கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை : ரூ. 1.38 லட்சம் பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினா் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 38,000 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:23 am

DIN

நீலகிரி மாவட்டம், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினா் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 38,000 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

உதகை - குன்னூா் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் போன்றவற்றுக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் பெறவும், வாகனப் பதிவுகளுக்கும், பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்கும் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று சோதனை நடத்தினா். அதில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 38,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடா்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்து வருவதால் அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.