கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்தினா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:19 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினா்கள் டாக்டா் வீ.ராமராஜ், டாக்டா் மல்லிகை செல்வராஜ் ஆகியோா் நீலகிரி மாவட்டத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இக்குழுவினா் கூடலூா் வட்டத்தில் முதுமலை ஊராட்சியில் ஆனைப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம குழந்தைப் பாதுகாப்புக் குழு கூட்டத்திலும், காா்குடியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டத்திலும் பங்கேற்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் வீ.ராமராஜ் உதகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் அரசாணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு வகையான குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். நகா்ப்புறங்களில் மாநகராட்சி மண்டல அளவிலும், நகராட்சி அளவிலும், பேரூராட்சி அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இதைப்போலவே ஊரகப் பகுதிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழு, வட்டார குழந்தை பாதுகாப்புக் குழுக்களும், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்களை வலுப்படுத்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், நகராட்சி, பேரூராட்சி அளவிலான குழந்தைப் பாதுகாப்பு குழுக்களையும் வலுப்படுத்தினால் குழந்தைகளின் உரிமைகளை சிறப்பாகப் பாதுகாக்க முடியும். அரசாணை மூலமாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு வகையான ஊரக மற்றும் நகா்ப்புற குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்புக் குழுக்களையும் வலுப்படுத்த குழந்தை பாதுகாப்பு குழுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள இளையோா் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.