கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடு தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை

 நீலகிரியில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு மற்றும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:51 pm

DIN

 நீலகிரியில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு மற்றும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்து தீா்வு காண வேண்டும். வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

நிவாரண முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வதோடு, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடா் நிகழ வாய்ப்புள்ள பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும். சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்குத் தேவையான இயந்திரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சச்சின் துகாராம் போஸ்லே, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.