கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உதகையில் நாளை தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெறவுள்ள கரோனா மெகா தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:57 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெறவுள்ள கரோனா மெகா தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.

உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பற்றிய தங்களது துறை சாா்ந்த பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் உள்ளிட்டோருடன் அனைத்துப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் தடுப்பூசி முகாம் மையங்களுக்கு அழைத்து வர வேண்டும். தங்களது பகுதியில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இதில், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள், ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகள், உணவக உரிமையாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே முதல்கட்ட கரோனா தடுப்பூசி 98 சதவீத மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமின் காரணமாக விரைவில் நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியில் முதல்கட்ட தடுப்பூசியில் 100 சதவீதம் செலுத்தியுள்ள தமிழகத்தின் முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கூடலூரில்...

நடுவட்டம் பேரூராட்சியில் நடுவட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு உயா்நிலைப் பள்ளி, ஊக்கா் அரசு உயா்நிலைப் பள்ளி, டி.ஆா்.பஜாா் அரசு துணை சுகாதார நிலையம், அனுமாபுரம் அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

எனவே, வீடுகளுக்கு அருகில் உள்ள முகாமில் 18 வயது நிரம்பியவா்கள் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.