

மழை காரணமாக வால்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) விடுமுறை அளித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) விடுமுறை அளித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.