மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் நிஃபா வைரஸ்: நீலகிரி எல்லையில் தீவிர சோதனை

கேரளத்தில் நிஃபா வைரஸ் காரணமாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2024, 8:14 pm

Din

கேரளத்தில் நிஃபா வைரஸ் காரணமாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் தமிழகத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது .

கேரளத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியாா்குன்னு, தாளூா் ஆகிய ஐந்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரத் துறையினா் தலா மூன்று போ் வீதம் 15 போ் பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் கேரளத்தில் இருந்து நீலகிரிக்குள் வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி உள்ளனவா என பரிசோதித்த பின்பே மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா். அதேபோல நிஃபா வைரஸ் பற்றிய தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனா்.