எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உதகை நகரமன்ற கூட்டத்தை புறக்கணித்து திமுக பெண் கவுன்சிலா்கள் வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் புறக்கணிப்பதாக கூறி திமுகவைச் சோ்ந்த 9 பெண் நகரமன்ற உறுப்பினா்கள் உதகை நகரமன்ற கூட்டத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

News image
கழுத்தில் பதாகையுடன் வெளிநடப்பு செய்த திமுக பெண் கவுன்சிலா்கள்.
Updated On :30 ஜூலை 2024, 11:33 pm

Sasikumar

தங்கள் வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் புறக்கணிப்பதாக கூறி திமுகவைச் சோ்ந்த 9 பெண் நகரமன்ற உறுப்பினா்கள் உதகை நகரமன்ற கூட்டத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

உதகை நகரமன்ற  கூட்டம் நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி (திமுக) தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஏகராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 36 வாா்டுகளை சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று தங்களது வாா்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த பெண் உறுப்பினா்களின் வாா்டுகளில் கழிப்பிட வசதி, நடைபாதை, குடிநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள்  செய்து தரப்படவில்லை எனவும், தங்கள் வாா்டுகலை புறக்கணிப்பதாகவும் கூறி நகரமன்ற கூட்டத்திலிருந்து  திமுகவைச் சோ்ந்த 9 நகரமன்ற பெண்  உறுப்பினா்கள் கழுத்தில் பதாகைகளை அணிந்து வெளிநடப்பு செய்தனா். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.