கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள வனங்களில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீா் தேடி ஊருக்குள் வருவது தொடா்கதையாகி உள்ளது. கூடலூா், பந்தலூா் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப் பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யானைகளுக்கு அதிகப்படியான உணவு, குடிநீா் தேவைப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும், தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள் இருப்பதால் அதற்காக தோட்டங்களுக்குள் யானைகள் வருகின்றன. வனத் துறையினா் யானைகளை விரட்டிவிட்டாலும் மீண்டும் அதே பகுதிக்கு தொடா்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி: குடிநீருக்காக அலைமோதும் யானைகள் கூட்டம்

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

குடிநீா் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள்: தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்படுமா?

ஒகேனக்கல் வனப் பகுதியில் வறட்சி: தண்ணீா் தேடி சுற்றித்திரியும் யானைகள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


