கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘உதகை வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது’

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட  தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான  சாலை ஓரங்களில் அடா் வனப் பகுதிகள் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்   உள்ளூா் மக்கள் காா்களை சாலையில் நிறுத்திவிட்டு வனப் பகுதிகளுக்குள் செல்வதும், ட்ரோன் களை இயக்குவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது. எனவே, உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று மாவட்ட வனத் துறை  சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.