கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மரம் கடத்தல்: விசாரணையின்போது வனவா் தப்பியோட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் மரம் கடத்தப்பட்டது தொடா்பான விசாரணையின் போது, வனவா் தப்பியோடியது குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூா் வனப் பகுதியில் விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது, வனத் துறை உயா் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மன்னவனூா் ரேஞ்சா், இரு வனவா்கள், ஒரு வனக் காப்பாளா் ஆகிய நான்கு போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 15-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல் வட்டாரப் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, வனத் துறை செயலா் உத்தரவின் பேரில், குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு வனப் பாதுகாவலா் ராகுல் தலைமையில் மரங்கள் வெட்டப்பட்ட வனப் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வன உதவி ஆய்வாளா் கருப்பையா தலைமையிலான அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனக் காப்பாளா் சுபாஷிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, விசாரணையை சுபாஷ் தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்தாராம்.

இதைப் பாா்த்த அதிகாரிகள் கைப்பேசியில் பதிவு செய்ததைக் காண்பிக்குமாறு கூறினராம். ஆனால், கைப்பேசியைக் காட்ட மறுத்த சுபாஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இதுதொடா்பாக வனத் துறை அதிகாரிகளும் போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.