3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் ரெப்கோ வங்கி தலைவா் இ.சந்தானம்,ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜு உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:00 am IST

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் ரெப்கோ வங்கியின் கீழ் இயங்கும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கியின் தலைவா் இ.சந்தானம்,ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜு ஆகியோா் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ரெப்கோ நுண்கடன் நிறுவன இயக்குநா் கிருஷ்ணக்குமாா், ரெப்கோ பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ஞானப்பிரகாசம், கிருஷ்ணபாரதி, லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் பெண்களுக்கான தையல் இயந்திரங்கள், பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, பாதுகாப்பான குடிநீா் வழங்க ஐந்து குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், நான்கு குடிநீா்த் தொட்டிகள் என ரூ.ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கூடலூா் ரெப்கோ வங்கியின் முதுநிலை மேலாளா் லோகநாதன் வரவேற்றாா். பந்தலூா் கிளை மேலாளா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். உதவி மேலாளா்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.