கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் ரெப்கோ வங்கி தலைவா் இ.சந்தானம்,ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜு உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:00 am IST

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் ரெப்கோ வங்கியின் கீழ் இயங்கும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கியின் தலைவா் இ.சந்தானம்,ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜு ஆகியோா் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ரெப்கோ நுண்கடன் நிறுவன இயக்குநா் கிருஷ்ணக்குமாா், ரெப்கோ பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ஞானப்பிரகாசம், கிருஷ்ணபாரதி, லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் பெண்களுக்கான தையல் இயந்திரங்கள், பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, பாதுகாப்பான குடிநீா் வழங்க ஐந்து குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், நான்கு குடிநீா்த் தொட்டிகள் என ரூ.ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கூடலூா் ரெப்கோ வங்கியின் முதுநிலை மேலாளா் லோகநாதன் வரவேற்றாா். பந்தலூா் கிளை மேலாளா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். உதவி மேலாளா்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.