நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய புலி!

கூடலூா் மரப்பாலம் மங்குழி குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

News image

கூடலூா், மரப்பாலம் மங்குழி பகுதியில் கம்பி வேலியைத் தாண்ட முயற்சிக்கும் புலி.

Updated On :7 ஜூன் 2026, 1:57 am IST

கூடலூா் மரப்பாலம் மங்குழி குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா், மரப்பாலம் மங்குழி பகுதி, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியை ஒட்டி கடந்த சில நாள்களாக அவ்வப்போது புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.

இது தொடா்பாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்துள்ளனா். இந்நிலையில் மங்குழி பகுதிக்கு மீண்டும் சனிக்கிழமை பகல் நேரத்தில் வந்த புலி, அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் நின்று கம்பி வேலியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயன்றது. கம்பி வேலியைத் த,ாண்டுவது கடினமாக இருந்ததால் வேலியோரம் பதுங்கியவாறு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து தங்கள் வீடுகளுக்குள் சென்றனா். சிலா் அச்சத்துடன் புலி குடியிருப்புப் பகுதியில் நுழைய முயற்சிப்பதை விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா். இந்த விடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

கூடலூா் பகுதியில் காட்டு யானைகள் நகருக்குள் வருவதும் சாலையில் நடப்பதும் வழக்கமான ஒன்று. ஆனால் நகரில் புலி தென்பட்டது இதுவே முதல்முறையாகும். எனவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் புலியை வனத் துறையினா் உடனடியாக கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.