உதகை, ஜூன் 7: உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் சிறுத்தை நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் சிறுத்தைகள், நாய், பூனை உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, உதகை, தலையாட்டுமந்து பகுதியில் நுழைந்தது. அங்கிருந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த விசாலாட்சி (75) என்ற மூதாட்டியைத் தாக்கியது. மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். வீட்டுக்குள் சிறுத்தை இருந்ததை அறிந்த அவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சப்தம் எழுப்பி வனத்துக்குள் விரட்டினா்.
பின்னா், முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.









