‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி  இன்று  தொடக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி பூங்காவில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மே 24-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

News image

தோட்டப் பயிா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படகு.

Updated On :22 மே 2026, 4:08 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா்  காட்டேரி பூங்காவில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் மலைப் பயிா்கள் கண்காட்சி  வெள்ளிக்கிழமை தொடங்கி மே 24-ஆம் தேதி வரை 3 நாள்கள்  நடைபெறுகிறது.

நீலகிரி  மாவட்டத்தில்  ஆண்டுத்தோறும் கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

 இதன் ஒரு பகுதியாக குன்னுாா் காட்டேரி பூங்காவில் பல்வேறு அம்சங்களுடன்  இந்த ஆண்டு மலைப் பயிா்கள் கண்காட்சி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் கருப்பொருளாக கடலோரப் பகுதிகளை சாா்ந்து வாழும் மீனவப் பெண்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக கடற்சாா் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தேயிலை, காபி, தென்னை, நுங்கு, பாக்கு 10 வகை மலைப் பயிா்களை கொண்டு நங்கூரம்,  துடுப்பு, சங்கு கலங்கரை விளக்கம் மற்றும் படகில் மீனவப் பெண், கடல் சாா்ந்த பல்வேறு சிறப்பு உருவ அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகப்படியாக வருகை புரிவாா்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளில் தோட்டக் கலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.