அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்?.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:16 am

DIN

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்?.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்களாக வேலை செய்யும் அனைவருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,  நிலுவைத் தொகையே உடனடியாக வழங்க வேண்டும், மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்படிருக்கும்  கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான தொகையைக் கொடுக்க வேண்டும்?, இலவச அமரர் ஊர்தி வாகனங்களை முறையாகப் பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இப் போராட்டத்தால் அமரர் ஊர்திகள் இயக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர்களுடன் ரெட்கிராஸ் கிளப் செயலர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதன்கிழமை மாலைக்குள் ஊதிய நிலுவைத் தொகை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் தமிழ்நாடு அரசு திட்ட ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில துணைச் செயலர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.