இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சிலம்பம் வீரர்களுக்குப் பாராட்டு

சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 7:44 am IST

சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தென் கொரியா, சர்வதேச ஐக்கிய நாடுகள் மற்றும் உலக தற்காப்புக் கலைகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து 15ஆவது உலக தற்காப்பு கலைகள் சாம்பியன்ஷிப் போட்டிகளை அக்டோபர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தியன. 
தென் கொரியாவில் சியோலில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தற்காப்புக் கலை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இயங்கி வரும் பகத்சிங் தற்காப்புக் கலைகள் பள்ளிச் செயலாளர் எம்.வினோத்குமார் மற்றும் 10 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 
இதில், வீரமணி ஜீவா, கிருஷ்ணன் விசாலி, ரவிச்சந்திரன், நந்தகோபால் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். உலக தற்காப்புக் கலைகள் கூட்டமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் சிறப்பிடம் பெற்ற சிலம்பம் வீரர், வீராங்கனைகளைப் பாராட்டினர். பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.