இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ: பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்

திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 6:47 am

DIN

திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்(40), இவர் தண்ணீர் பந்தல் பகுதியில் சொந்தமாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பின்னலாடைத் துணி ரோல்களை முதல் தளத்தில் உள்ள அறையில் இருப்பு வைத்துள்ளனர். இந்த நிலையில், துணி வைத்துள்ள அறையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணி அளவில் கரும்புகை வருவதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். 

Story image

இதுகுறித்து அவிநாசி தீயணைப்பு நிலையத்துக்கும், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலின்பேரில் அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் துணி ரோல்களில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். 

எனினும், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.